யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் திருட்டு !

யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் மற்றும் கோழிக் கூட்டில் நின்ற கோழிகள் என்பன நேற்று கடந்த திங்கட்கிழமை(01) மதியம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே தடவையில் இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு உரிமையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
வளர்ப்பு நாய்களுக்கு இலக்கங்கள் பொறித்த கழுத்துப்பட்டி!
தனியார் கல்வி நிலையங்களை மூடபோவதாக ஒன்றியத்தினர் எச்சரிக்கை!
வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!
|
|