யானை தாக்கி யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் மரணம்!

Monday, July 20th, 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான 32 வயதுடைய காயத்திரி டில்ருக்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் நேற்று நடமாடியுள்ளனர்.

இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியபோதே விரிவுரையாளரை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

Related posts:

மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது - ஐ.நாவிடம் சீ...
அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிப...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜய...