மேலும் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது!

Friday, August 11th, 2017

யாழ். குடாநாட்டை பதற்றத்துக்கள்ளாக்கியுள்ள ஆவா குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மானிப்பாய் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலும் கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயலகள் பலவற்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நவகமுவ பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் மிரிகானை பொலிஸ் நிலையத்தில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த நபரிடமிருந்து பிஸ்டல் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.தனமல்லவில பிரதேசத்தைச் சேர்ந்த இவர் புறக்கோட்டை ஜாஎல கேகாலை திவுல்கெல உள்ளிட்ட பிரதேசங்களில் காசு திருட்டு சொத்துக்களை அபகரித்தல் முதலான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்பவர் என தெரியவந்துள்ளது

Related posts:

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் முதியவரின் சடலம்: பொறுப்பேற்குமாறு கோரிக்கை
வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு - அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக ...
நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் இன்றி வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பத...