மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை – பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ்!

Thursday, March 25th, 2021

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

அத்துடன் இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் குறிப்பிடுகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
தையிட்டி விகாரை முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது - சவேந்திர சில்வ...
இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...