மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, July 20th, 2020

தேர்தல் சட்டங்களை மீறியமை குற்றச்சாட்டு தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்..

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது –

தேர்தல் சட்டவிதிகளை மீறியதாக 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுத் தொடர்பில் 147 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , 44 பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவளை அரச வாகனங்கள் 2 உட்பட 60 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்து அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts: