மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
Friday, April 30th, 2021மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மாத்தளை, குருணாகல் , மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை – தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல் – பன்னல காவல்துறை அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
மொனராகலை – சியம்பலாண்டுவ காவல்துறை அதிகார பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ...
இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர த...
|
|