முறைப்­பாடு கிடைப்பின்  கைது­செய்ய அர­சாங்கம் தயங்காது!

Thursday, June 22nd, 2017

கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் அவ­ருக்கு எதி­ராக எவராவது முறைப்­பாடு தெரி­விக்கும் பட்­சத்தில் அவரை கைது செய்­யவும் அர­சாங்கம் தயங்காது எனவும் நீர்ப்­பா­சன இராஜாங்க அமைச்சர் பாலித்­த­ரங்கே பண்­டார தெரி­வித்துள்ளார்.

செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அண்மைக்­கா­ல­மாக நாட்டில் இன­வாதம் தலைதூக்க ஆரம்­பித்­துள்­ளது. இன­வாதம் நாட்டில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை எமது நாட்டின் வர­லாற்றை நோக்கும்போது தெளி­வாகப் புரியும். அது மட்­டு­மல்­லாமல் கடந்த 30 வரு­ட­கா­ல­மாக ஏற்­பட்ட யுத்­தமும் இன­வாத ரீதி­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதனால் மக்­களின் வாழ்­வி­யலில் பாரிய பாதிப்பு ஏற்­பட்­ட­துடன் நாட்டின் அபி­வி­ருத்­தி­யிலும், பொரு­ளா­தா­ரத்­திலும் நாம் பாரி­ய­தொரு பின்­ன­டைவை எதிர்­நோக்க வழி­வ­குத்­தது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் 160 கிறிஸ்தவ மதத்தலங்கள் தாக்கப் பட்டுள்ளதாக அன்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன. இது குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

Related posts: