நிதி மோசடி செய்த பெண் கைது!

Wednesday, July 13th, 2016

வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை நேற்று (12) இரவு அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக தெரியவருவதாவது –

சுன்னாகம் மற்றும் சிறுப்பிட்டி பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில், 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகக் கூறிய மேற்படி பெண், கடன் பெற விரும்பிய 55பேரிடம், தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்துள்ளார்.

இருப்பினும், உரிய கடனைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றுவதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பந்தப்பட்டப் பெண்ணை, அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இந்தப் பெண், இதேபோல சுன்னாகம் பொலிஸ் பிரிவிலும் மக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது..

Related posts: