ஜப்பான் அனுப்பிய மருந்தினால் பயன் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 1st, 2020

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை ஜப்பானால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

எனினும் இந்த மருந்து கொரோனாவுக்கு வெற்றிகரமான சிசிச்சை அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் Hydroxy chlroquine என்ற மருந்து பயன்படுத்தும் நடவடிக்கை இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளார்.

15 நிமிடங்கள் சோதனை நடைமுறைகள் மூலம் நோயாளியை உறுதி செய்யும் பரிசோதனைகள் தற்போது வரையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை இலங்கையினுள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts:


வேட்பு மனு தாக்கலுடன் சொத்து விபரங்களையும் ஒப்படைக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்!
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்...
இம்மாத இறுதிக்குள் கொரோனா இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக...