முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை!

Tuesday, January 7th, 2020

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக, சரண குணவர்த்தன பணிபுரிந்த காலத்தில், வாகன கொள்வனவு குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காகவே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: