மின் தாக்கி சமுர்த்தி உத்தியோகத்தர் பலி!
Monday, May 2nd, 2016சுதுமலை, அம்மன் கோயில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், உடுவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் நாகையா செந்தூர்செல்வன் (வயது 44) எனப் பொலிஸார் கூறினர்.
நீர் இறைக்கும் இயந்திரத்தின் ஆழியினை போடும் போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம், பிரதே பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Related posts:
மீன்பிடித்துறை அமைச்சின் ஒரு தொகுதி அதிகாரங்கள் இராஜாங்க அமைச்சரிடம் செல்கின்றது!
காணாமல் போனோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் குறித்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை...
காணொளி தொழில்நுட்பத்தினூடாகஉறவினர்களை சந்திக்க சிறைக் கைதிகளுக்கு சந்தர்ப்பம் - சிறைச்சாலைகள் திணைக...
|
|