மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை! 

Wednesday, March 15th, 2017

தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபையின் பணியாளர்கள் இன்றையதினம் தொழிற்சங்கப் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டாலும் மின்விநியோகம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்சார சபை பணியாளர்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்நோக்கில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக்குழு ஆறு மாத காலத்தில் பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: