மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Tuesday, April 12th, 2016தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் நேற்று(11) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வீட்டின் உரிமையாளரான ஏ.நுவான் சந்துரங்க (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு.
தென்னைச் செய்கையாளர்களுக்கு மானியக் கொடுப்பனவு வழங்கல்!
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் - அமைச்சரவையில் யோசனை ...
|
|