மாமரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் படுகாயம்

Monday, May 15th, 2017

வீட்டின் மாமரத்தில் மாங்காய் பிடுங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தரொருவர் மாமரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். .

குறித்த சம்பவம் சனிக்கிழமை(13) காலை-10 மணியளவில் யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீசாலைப் பகுதியைச்  சேர்ந்த செல்வராசா விஜயகுமார்(வயது- 50) என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த குடும்பஸ்தர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஊவா, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் சாத்தியம்!
இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார ஏற்பாடு...