மானிப்பாய் இளைஞர்கள் துரத்தியதால் தலைதெறிக்க ஓடிய வாள்வெட்டுக் கும்பல்!

Thursday, June 14th, 2018

மானிப்பாய் பகுதியில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவரை இளைஞர்கள் சிலர் துரத்திச் சென்ற போதும் அவர்கள் தப்பித்தனர். மூவரும் கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டு விட்டு தப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதான வீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளானர். அவர்கள் வீதியில் நின்ற இளைஞர்களுக்கு வாள்களைக் காண்பித்துள்ளனர்.

அதனை அவதானித்த இளைஞர்கள், வாள்வெட்டுக் கும்பல் துரத்திச் சென்றுள்ளனர். எனினும் வாள்களுடன் சென்றவர்கள் தப்பித்துள்ளனர். அந்த மூவரும் கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் பயணித்த போது பொலிஸாரை கண்டனர்.

பொலிஸாரைக் கண்டதும் வாள்களை வீதியில் போட்டுவிட்டு மூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பித்துள்ளனர். இதேவேளை வாள்வெட்டுக் கும்பலைத் துரத்திச் சென்ற மானிப்பாய் பகுதி இளைஞர்கள் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

Related posts: