மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த புகையிரதம் இடை நிறுத்தம்!
Saturday, June 25th, 2016
மாத்தறையில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அளுத்கம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் மாத்தறையில் இருந்து இன்று காலை 6.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பின் அளுத்கம பகுதியில் வைத்து காலை 9 மணியளவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதத்தில் பயணித்த பயணிகளை மற்றுமொரு புகையிரதமான காலு குமாரியில் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செயலிழந்துள்ள புகையிரத்தின் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அடித்துப் பணம் பறித்தவருக்கு ஒத்திவைத்த 9 மாத சிறை!
சமூக ஊடகங்களை பயன்படுத்தி 61 மில்லியன் ரூபா நிதி மோசடி - பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கப்படும் - இலங்கைக்கான பிரித்தானிய உயர...
|
|