மாணவர்களின் பயன்பாட்டுகு பேருந்து அன்பளிப்பு

Sunday, August 6th, 2017

அனுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேருந்து வண்டியொன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.

ஜனாதிபதி அனுராதபுரத்துக்கு முன்னர் விஜயம் செய்திருந்தபோது, அனுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய 12ம் ஆண்டு மாணவியான ஏ.டி.டி.சத்சரணி விடுத்த கோரிக்கைக்கமைய அந்த பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக 28 இருக்கைகளை கொண்ட பேரூந்தை குறித்த மாணவியிடம் ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார்.

இந்த நிகழ்வில்  கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகள் உலகை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் உயர் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related posts: