மலேஷிய பிரதமருக்கு நல்லிணக்கம் குறித்து விளக்கம் கொடுத்தார் ஜனாதிபதி !
Saturday, December 17th, 2016இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமுக அபிவிருத்தி குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போதே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கையில் விண்கற்கள் பொழிவு!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!
இலங்கை - கம்போடிவிற்கிடையில் வர்த்தக சந்திப்பு!
|
|