மருத்துவத்துக்கும், நெருங்கிய உறவுகளின் இறுதி சடங்கிற்காக மாகாண எல்லையை கடக்கமுடியும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவிப்பு!
Sunday, July 11th, 2021மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடரும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளுக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் மருத்துவ காரணங்களுக்காகவும், நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவும் மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு வாழ்த்தியதுபாக்கிஸ்தான்!
வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை - கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங...
யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு!
|
|