மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!
Sunday, February 4th, 2018
சாவகச்சேரியில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை செலுத்திப் பார்த்தவருக்கு சாவகச்சேரி நீதிமன்றினால் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.
கொடிகாமம் பொலிஸாரால் பதிவு செய்யப்படாத மற்றும் காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிவான் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.
இதேவேளை மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி வழக்கு!
கொரோனா வைரசால் உலகின் ஒட்டுமொத்த தேசமும் மிகப்பெரும் பாதிப்பு - எச்சரிக்கும் உலக வங்கி!
பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !
|
|
|


