மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
Tuesday, June 6th, 2017
பொசன் போயா உற்சவங்களை முன்னிட்டு, 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு நாட்களுக்கு சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று கலால்வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அந்த ஏழு நாட்களும், மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களிலும் சகல இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதுமட்டுமன்றி, விசேட சுற்றி வளைப்பு தேடுதல்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
15 மாதத்தில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன - ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற...
அகதி அந்தஸ்து பெற முயன்ற ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது !
தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் – வலியுறுத்துகின்றார் முன்னாள் ஜனாதிபதி ம...
|
|