மட்டுவில் அம்மன் கோவிலுக்கு சென்ற பெண் விபத்தில் மரணம்!

Monday, March 26th, 2018

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சறுக்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

பங்குனித்திங்கள் தினமான இன்று காலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர்வீதியில் சறுக்கிவிழுந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியில் வசித்துவரும் 53 வயதுடைய விஜகாந்தன் சுசிகலா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

சாவகச்சேரி பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:


நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட...
பல தரப்பினரின் முன்மொழிவுகளை பரிசீலித்து மூன்றாம் வாரத்தில் எல்லை நிர்ணயம் குறித்து இறுதி அறிக்கை -...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விடுக்கப்பட்டது எச்சர...