எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக குறைநிரப்பு பிரேரணை பிரதமரினால் சமர்ப்பிப்பு!

Wednesday, August 10th, 2022

நாட்டின் எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக 3,27,587 கோடியே 65 இலட்சத்து 58,000 ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமென அதன் மூலம் 48,913 கோடியே 38 இலட்சத்து 91,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர்  பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விசேட செலவினங்களுக்காக 1,34 கோடியே 51 இலட்சத்து 1,000 ரூபாவும் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்காக 46,720 கோடியே 88 இலட்சத்து 33,000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்காக 37,632 கோடியே 56 இலட்சத்து 31,000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 11,280 கோடியே 82 இலட்சத்து 60,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைவேளை, சுகாதார அமைச்சுக்கு 24,806 கோடியே 99 இலட்சத்து 98,000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சுக்கு 30,710 கோடியே 84 இலட்சம் ரூபாவும் விவசாய அபிவிருத்தி அமைச்சுக்காக 13,856 கோடியே 4,85,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சக்தி,எரிசக்தி அமைச்சுக்கு 26,979 கோடியே 57 இலட்சத்து 50,000 ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 20,000 கோடி ரூபாவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்காக 7,346 கோடியே 74 இலட்சம் ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1,592 கோடியே 20 இலட்சம் ரூபாவும் மீதமான நிதி ஏனைய அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: