மசகு எண்ணெயின் விலை அதிகரித்தாலும் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில!
Tuesday, February 23rd, 2021உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும், அதன் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினைகள் தொடர்பில் பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதானது இலங்கையின் வெளி வர்த்தகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வடக்கில் அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல் - யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!
உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரிய...
|
|