மக்களே அவ­தா­ன­ம் – எச்சரிக்கிறது வளிமண்டலத் திணைக்களம்!

Thursday, August 18th, 2016

நாட்டில் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­­தற்­கான சூழல் காணப்­­டு­வதால் கரை­யோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மற்றும் கடற்­றொ­ழிலில் ஈடு­­டு­கின்­­வர்கள் மிகவும் அவ­தா­­மாக செயற்­­­ வேண்டும் என கேட்­டுக்­கொள்­­தாக வளி­மண்­டள­வியல் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­­தா­வது

நாட­ளா­விய ரீதியில் கடற்­­ரைப்­­கு­தி­களில் பலத்த காற்று வீசு­­தற்­கான அதி­­ளவு வாய்ப்­புகள் காணப்படு­கின்­றன. இத­­டிப்­­டையில் மேற்கு, வட­மேற்கு,தெற்கு மத்­திய மற்றும் சப்­­­முவ மாகாணங்களில் அதி­­ளவு மழை பெய்­­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

கடற்­­ரைப்­­கு­தி­களில் மணித்­தி­யா­­த்­துக்கு 60 தொடக்கம் 70 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­ கூ­டிய சூழல் காணப்­­டு­­தனால் கொழும்­பி­லி­ருந்து மாத்­தறை வழி­யாக காலி வரை­யான பகு­தி­களில் இடி­யுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அத்­தோடு மேற்­கி­லி­ருந்து தென்­மேற்குத் திசைக்கு மணித்­தி­யா­­த்­துக்கு 35 தொடக்கம் 40 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­ கூடும்.

கடல்­சார்ந்த பகு­தி­­ளான புத்­தளம் தொடக்கம் திரு­கோ­­மலை மன்னார், காங்­கே­சன்­துறை வரை­யான, அம்­பாந்­தோட்டை தொடக்கம் மட்­டக்­­ளப்பு ஊடான பொத்­துவில் பகு­தியில் மணித்­தி­யா­­த்­துக்கு 70 தொடக்கம் 80 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­கூ­டிய சூழல் காணப்­­டு­கின்­றது.

இதனால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்­பி­­தே­சங்­­ளி­லுள்ள மக்கள் அவ­தா­­மாக இருக்க வேண்டும். நாடு முழு­வதும் மணித்­தி­யா­லத்­துக்கு 50முதல்-55 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­கூடும். தற்­கா­லி­­மாக நிலைக்­கொண்­டுள்ள குறித்த தாழமுக்க பலத்த சுழல் காற்­றாக மாறு­­தற்­கான சூழல் காணப்படுகின்றது. இதனால் இடியுடன் கூடிய மின்னலும் சில பகுதிகளில் ஏற்படலாம். எனவே மக்கள் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Related posts: