ம­ருத்­துவ பரி­சோ­த­னை­க­­ளுக்கு வற் வரியில் சலுகை ­-  வர்த்­த­மானி  இன்று வெளியா­கும்!

Monday, June 20th, 2016

மருத்­துவப் பரி­சோ­த­னை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த வற் வரியில் சலுகை வழங்கும் வகையிலான விசேட வர்த்­த­மானி இன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்

கொலன்­னா­வையில் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேரில் சந்­தித்த போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.இது தொடர்பில் மேலும் அவர் குறிப்­பி­டு­கையில்

நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதன்­படி இது தொடர்பில் கடந்த அமைச்­ச­ர­வையின் போது பேசியிருந்தோம்

மேலும் மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்ளோம்இதன்­பி­ர­காரம் சுகா­தாரப் பரி­சோ­த­னைக்­காக விதிக்­கப்­பட்­டி­ருந்த வற்­வ­ரியில் திருத்தம் செய்து சலுகை வழங்க தீர்­மா­னித்­துள்ளோம்.இதன்­படி அதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தல் இன்று வெளியிடப்படவுள்ளது. மக்களின் நன்மை கருதியே பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்தோம் என்றார்

Related posts: