போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது!

Friday, April 13th, 2018

45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் பிரிவை சேர்ந்த குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அலவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரை நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Related posts:

இரு தினங்களில் விசேட வர்த்தமானி வெளிவரும் - சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவிப்பு!
பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் - உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெர...
அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...