பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டு: பிடிபட்ட ஒருவரின் விளக்கமறியல் நீடிப்பு!
Monday, February 6th, 2017
சுன்னாகம் நகரப் பகுதியில் 2பொலிஸார் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில கைதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந்தும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சுன்னாகம் நகரப் பகுதியில் வீதிரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு மற்றும் முகங்களை மறைத்தபடி வந்த இருவர் வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்திவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரின் விளக்கமறியலை மேலும் 14 நாட்கள் நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்படைய மேலும் 4 பேர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.
Related posts:
|
|