பொறுப்பற்ற வர்த்தகர்களை முற்றுகையிட நடவடிக்கை!

Thursday, November 17th, 2016
பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ளும் வர்த்தகர்களை உடனடியாக கண்டறிவதற்காக சுற்றிவளைப்பு பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சில வர்த்தகர்கள் மோசடி நடவடிக்கையில ஈடுபடுவதாக முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரிவு வாடிக்கையாளர்களை பாதுகாக்கும்பொருட்டு அவர்களை தெளிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அறிவுரைக்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்கு வசதியாக பின்வரும் தொலைபேசி இலங்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாகாணம்        தொலைபேசி இலக்கம்
மேல்                    0771088914 /   0771088907

தென்                     0771088903

வடக்கு                  0771088914

ஊவா                     0771088895

கிழக்கு                   0771088899

வட மத்திய            0771088907

சப்ரகமுவ              0771088904

வட மேல்               0771088902

மத்திய                   0771088905

1111

Related posts: