இலங்கைக்கு  வந்துள்ளது இந்தியக் குழு!

Friday, March 30th, 2018

இந்தியாவின் குழு ஒன்று மத்தல விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு வருவதாக இந்திய ஊடகங்கள்தெரிவிக்கின்றன.

இந்திய அரசாங்கம் கடந்த வருடம் மே மாதம் மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது.

இதனடிப்படையில் குறித்த உடன்படிக்கை தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அந்த குழு இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: