பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் போராட்டம்

Tuesday, September 5th, 2017

நாடளாவிய ரீதியாக பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  யாழ்ப்பாண நகர சபையில் பணிபுரிந்த சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் ஐந்து பேரை சுகாதாரத்துறை செயலாளரினால் தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் முறையான தீர்வு வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்

Related posts: