பேருந்து விபத்து: 18 பேர் வைத்தியசாலையில்!
Sunday, September 25th, 2016
திருகோணமலையிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த தனியார் பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த 6 பெண்கள் மற்றும் 12 ஆண்கள், ஹொரவப்பத்தான மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரவப்பத்தான பொலிஸ் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
வலி. கிழக்குப் பிரதேசத்தில் வாழைக்குலைத் திருட்டு அதிகரிப்பு!
பன்றிக்காய்ச்சல் தொற்று அபாயம் மருத்துவ ஆய்வுக்கு தினமும் 2,000பேரின் குருதி!
இளைஞர்களின் தொழிலின்மையை நிறைவு செய்ய இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்...
|
|