பேருந்து சேவை இல்லை: மாணவர்கள் பெரும் சிரமம்!
Friday, July 27th, 2018வடமராட்சி கிழக்கு பகுதி பருத்தித்துறைக்கு வரும் முதலாவது பேருந்துச் சேவை நடைபெறாததனால் மாணவர்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து பருத்தித்துறைக்கு முதலாவதாக பயணம் மேற்கொள்ளும் இ.போ.ச. பேருந்தில் மாணவர்களே அதிகமாக பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதனால் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் பலர் உறவினர்களின் உதவியுடன் பாடசாலைக்குச் சென்றனர்.
நீண்ட நேரமாக பேருந்து வராததால் காத்திருந்த மாணவர்கள் சிலர் உறவினர்களின் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு அவசரமாகச் சென்றபோது இடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் காயமடைந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!
யாழ் குடாநாட்டு இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை!
ஐந்து சிறுவர்கள் மருத்துவமனையில்!
|
|