புலம்பெயர் தமிழர் கருத்தை நாடும் பேரவை!
Tuesday, March 8th, 2016புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பான தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது.
அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது –
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது. எனவே, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில், புலம்பெயர் தமிழ் உறவுகள் தங்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியாகவோ பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது..
Related posts:
நாட்டில் ஊழலை ஒழிக்க விஷேட வேலைத்திட்டம்!
யாழில் கடலில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு !
மாநகர சபையின் நிபந்தனையை மீறிச் செயற்பட்ட சிற்றங்காடிகள் இரண்டுக்கு எதிராக நடவடிக்கை!
|
|