புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் – ஜனாதிபதி!
Wednesday, July 20th, 2016
புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் இடம் பெறும் என இலங்கை சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுத்தமான குடிநீர் வேண்டி ரொசல்ல கிராம பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
5,450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது - யாழ் மாவட்ட அரசாங்...
|
|
|


