பிரான்ஸ் வீதி விபத்தில் யாழ்ப்பாண மாணவன் பலி!
Tuesday, October 25th, 2016
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena என்னும் பெயர் கொண்ட பிரபலமான வீதி ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து கடந்த 19ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நண்பர்களுடன் பாடசாலைக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் போது மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்த அதேவேளை, அவருடன் சென்ற சக மாணவர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
உலகப் பொருளாதாரம் வலுவிழந்தாலும் நாம் வலுவாக உள்ளோம் - பிரதமர்!
வவுனியா பேருந்துக்கு கல்வீச்சு: 4 பேர் கைது!
மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!
|
|
|
இலங்கையின் அரசகரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலேயே ஆரம்ப கல்வியை வழங்க வேண்டும் - அமைச்ச...
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான வழிமுறைகளை முன்வையுங்கள் - அமைச்சர் கலாநிதி பந்...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு - பல்கலைக்கழக மானி...


