பாரிஸ் உடன்பாட்டில் கைச்சாத்திடும் இலங்கை!
Saturday, April 9th, 2016
இலங்கை ஐ.நா செயற்திட்டத்தின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் வைத்து பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு, ஏப்ரல் 22ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திடவுள்ளார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால உட்பட்ட உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.இந்த உடன்படிக்கையின் நோக்கம், உலக வெப்பத்தை இரண்டு டிகிரி செல்ஸியஸ்சுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தமிழ்மொழி அவசர சேவைக்கே அதிகளவான அழைப்பு - வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம்!
யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைப்பு - இந்திய இராணுவ பிரதானி வியாழன்று இலங்கை விஜயம்!
|
|
|


