பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Wednesday, July 7th, 2021
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்று மின்தடை
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் - இராணுவ ...
மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும்...
|
|
|


