பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!

பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், பாடசாலைகளிலும், வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஜூலை மாதம் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்பு – பிரதமர்!
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு - சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் - பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையி...
|
|