பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி!
Thursday, September 29th, 2016பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஆரம்ப தினமான எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை-09 மணி முதல் பிற்பகல்-03 மணி வரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும்என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய பரிபாலன சபை இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் வழிபாட்டுக்கான அனுமதியை இராணுவம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனிப்பாணியை தேன் எனக்கூறி விற்பனை செய்த நபர் அகப்பட்டார்!
சீனா- இலங்கை இடையே நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!
|
|