பரீட்சை நிலையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு!

Tuesday, December 6th, 2016

இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

பரீட்சை நடைபெறும் அனைத்து பரீட்சை நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஆயுதம் தாங்கிய பொலிஸார் இன்று முதல் சகல பரீட்சை நிலையங்களிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

exam-sri-lanka

Related posts: