பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடாக ஏக்கரொன்றுக்கு ஒரு இலட்சம் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, August 21st, 2024

பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடாக ஏக்கரொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி வறட்சி, வெள்ளம் மற்றும் வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: