பயணிகள் விமானங்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Sunday, December 11th, 2016

சிறிய ஆளில்லா விமானங்களைக் கொண்டு மற்ற விமானங்களை தாக்கும் உத்தியினை தீவிரவாதிகள் பின்பற்றக்கூடும்  என கனடா மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவின், Edmonton பகுதியில் இருந்து வெஸ்ட் ஜெட் என்ற விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, விமானத்திற்கு அடியில் சுமார் 60 மீற்றர் ஆளில்லா விமானம் ஒன்று பறந்து சென்றது.

அதுமட்டுமின்றி கடந்த மாதம் ரொரன்ரோவுக்கு போர்ட்டர் எயர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்த போது அதற்கு அருகாமையில், ஆளில்லா விமானம் என்று கருதப்படும் ஒன்று சென்றுள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுமார் பத்து முதல் நாற்பது நிமிடங்கள் வரை மட்டும் பறக்கக்கூடிய ஆளில்லா விமானம் மூலம் வேகமான காற்றிற்கு மத்தியில், அதி உயரத்தில் விமானங்களை இலக்குவைக்க முடியாது எனவும் சில நிபுணர்கள் கருத்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Flight-e1463482522657

Related posts:

ஜனாதிபதியின் மகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை - மறுக்கிறார் கிரிக்கெட் வீரர் மிலிந்த சிறிவர்த்தன
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுர...
ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – ஜனாதிபதியுடனான சந்திப்பில் அ...