பயணிகளின் மனமாற்றம் : தடுமாறும் பேருந்து தொழில்துறை!

Monday, June 11th, 2018

பேருந்துகளிலும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கட்டண அதிகரிப்பை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து தொழில் துறைக்கு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அண்மையில் பேருந்து கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அத்துமீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர!
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப...
பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிப்பு – பெற்றோரும் ஆசிரியர்கள...