பந்து தலையில் தாக்கியதால் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா மருத்துவமனையில்..!

Monday, April 25th, 2016

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பந்து தலையில் தாக்கி காயமடைந்ததால் இலங்கை வீரர் கௌஷல் சில்வா மருத்துவமனையில் அனுகமதிக்கப்பட்டுள்ளார்

கௌஷல் சில்வா, இலங்கை அணிக்காக 24 போட்டிகளில் விளையாடி இதுவரை ஆயிரத்து 404 ரன்கள் குவித்துள்ளார். உள்ளூர் போட்டி ஒன்றில், பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பேட்ஸ்மேனுக்கு அருகில் நின்றதால் பந்து தலையில் பட்டது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் தினேஷ் சண்டிமால் கூறுகையில்,

சில்வாவின் பின் பக்க தலை அடிபட்டு வீங்கி உள்ளது. பந்து தாக்குவதில் தப்பிக்க முயற்சித்த போதும் அது பலனிக்கவில்லை.

அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப்ஸ் ஹியூஸின் மரணத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய ஹெல்மேட்டை தான் சில்வா அப்போது அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அடுத்ததாக, இங்கிலாந்து அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளதால் அதற்கான பயிற்சி ஆட்டங்களை இலங்கை வீரர்கள் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: