பணியை புறக்கணிக்காத சுகாதார சேவையாளர்களை கௌரவிக்க நடவடிக்கை – பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Thursday, March 16th, 2023சுகாதார போராட்டத்திற்கு ஆதரவளிக்காத நோயாளர்களின் நலன்கருதி செயற்பட்ட சுகாதார சேவையாளர்களை பாராட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பணிப்புறக்கணிப்பின் போது கடமையில் இருந்த மருத்துவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையான விபரங்கள் திரட்டப்படவுள்ளன. அதனை அடுத்து அவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
20 ஆவது திருத்தம்: 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் - பாராளுமன்ற பிரதி செயலாளர்...
மின்னுற்பத்திக்கான டீசல் பாவனையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்!
ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - ஜனாதிபதி ரணில...
|
|