பணியாளர்களுக்கான புதிய வீட்டுத் தொகுதிகள்!
Tuesday, July 19th, 2016
கொழும்பு கெப்பிட்டிக்கொல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள ‘சமீட்’ வீட்டுத்தொகுதிக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய குடியிருப்புத் தொகுதிகளானது அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றபவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரச மற்றும் தனியார் சேவை தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!
யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!
நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அத...
|
|
|


