பணியாளர்களுக்கான புதிய வீட்டுத் தொகுதிகள்!
Tuesday, July 19th, 2016
கொழும்பு கெப்பிட்டிக்கொல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள ‘சமீட்’ வீட்டுத்தொகுதிக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய குடியிருப்புத் தொகுதிகளானது அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றபவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரச மற்றும் தனியார் சேவை தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது – புதிய செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே ...
விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் விழா இன்று.!
|
|