நீர்க் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும்

Wednesday, August 9th, 2017

நீர் கட்டணத்தில் 5 வருடங்களாக மாற்றங்கள் ஏற்படுத்தாததன் காரணமாக நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நீர்க் கட்டணங்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். ஆனால் 5 வருடங்கள் ஆகியும் இன்னும் திருத்தப்படவில்லை. இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்

தற்போது வரட்சியான காலநிலை காரணமாகப் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக,  நீர்க் கட்டணத்தில் மாற்றம் செய்யாதுத் தாமத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: