நியாயம் கோரி கொழும்பில் போராட்டம்!
Tuesday, March 21st, 2017வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய சில கோரிக்கைகளை முன்வைத்து, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முன்னாள் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகளில் இன்னும் இராணுவத்தினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அம் மக்களின் காணி உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தள்ளனர்.
Related posts:
துவிச்சக்கர வண்டி திருடியவருக்கு சிறை!
அமைச்சர்களின் வாகன கொள்வனவு தொடர்பில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!
அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சித்தால் அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் மெற்றின் தொன் அரிசியை இறக்...
|
|