நிதியமைச்சர் சீனா பயணம்!

சீன உட்கட்டுமான வசதி முதலீட்டு வங்கியின் முதலாவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் ரவி கருணாநாயக்க சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாடு இன்றும் மற்றும் நாளை நடைபெறவுள்ளது. சீனா ஜனாதிபதியின் எண்ணக்ககருவின் அடிப்படையில் இந்த வங்கி நிறுவப்பட்டது.
ஆசிய பிராந்திய வலய நாடுகளின் நீண்ட கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வங்கிக் கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கட்டமைப்பின் ஆரம்ப உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினரால் மீட்பு!
பொலிஸ் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தம் இல்லை -அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு!
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவு வெளியானது!
|
|